கரைத்தீவு பழைய மாணவர்கள் ஒன்று கூடலின் அமைப்பான Ka-CED இன் இம்மாதத்திற்கான நிர்வாக கூட்டம் இன்று சனிக்கிழமை (20th May 2023) நடைபெற்றது. எதிர்கால மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்/ நிகழ்வுகள் சம்மந்தமாக இக்கூட்டதில் கலந்துரையாடப்பட்டது.
நிர்வாக கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
1. நிர்வாக கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை நடைபெறும்.
2. மாதாந்த சந்தாவாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ரூபா 1000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகை வழங்களாமென்று ஆலோசனை எடுக்கப்பட்டு அதற்கான முடிவை அந்தந்த வகுப்புகளில் ஆலோசிக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.
3.திங்கள் 2023 /05 /22 அன்று அதிபரை பாடசாலையில் எமது Ka-CED அமைப்பை அறிமுகம் செய்வது பற்றி எழுத்துமூலமான ஆவணத்துடன் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது.
4. ஆயுர்வேத வைத்தியசாலை மூலம் பெறப்பட்ட கடிதத்திற்கு ஏற்ற ஊர் மக்களின் கையெழுத்து பெறுவதற்கு சகோ. அதீக் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
5. அகதியா பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க உதவி கோரப்பட்ட கடிதத்திற்கு தற்போது வழங்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment